“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

இவர் வாழ்நாள் சாதனையாளரே

ஜெயம் தங்கராஜா

கவி 748

இவர் வாழ்நாள் சாதனையாளரே

முயற்சி மூச்சாகியது இலட்சியம் நிழலாய்த்தொடர்ந்தது
அவமானங்களை அனுபவமாக்கி
தோல்வியையும் வரலாற்றாக்கிய
தெளிவான பயணத்தில் வானத்தை வசமாக்கினார்

உறக்கத்தை இழந்தது இரவுகளுக்குத் தெரியும்
தாய்தமிழ் விருந்தளித்தார் உறவுகளுக்குப் புரியும்
கற்றுக்கொண்ட கருத்துக்களால்
வாழ்வை கொண்டோர்கள்
பெற்று முகவரி பேரும்புகழும் கண்டார்கள்

கற்கண்டு குரலதுவால் செவிகளில் தேனூறும்
உதடுகளின் வார்த்தைகள் நிமிடங்களை அர்த்தப்படுத்தும்
உள்ளம் உள்வாங்கி உற்சாகவிழா காணும்
தத்துவத்தின் வித்தகர் இவரென உரைக்கும்

காற்றும் ஞானம் பெற்றது உண்மை
தூற்றினார் சிலர் அடைந்தபின்னர் நன்மை
நேற்றோ இன்றோ நாளையோ மாறாதொருவர்
போற்றிக்கொள்ள இவரைவிட்டால் யார்தானெவர்

புன்னகையிழையோடியே வார்த்தைகள் விளையாடும்
மதுரக்குரலோன் என்பதா அமுதக்குரலோன் என்பதா
அன்றுதொட்டு இன்றுவரை தனித்துவமான குரல்நயம்
இறைவனின் இரகசியம்
இனமதின் அதிசயம்

பொழுது போகவில்லை பொழுதெல்லாம் ஆக்கப்பட்டது
விரல்கள் கோடிக்கணக்கில் எழுத்தைக்கொண்டு மொழிக்கோலமிட்டது
விடாமுயற்சியுடன் இன்றுவரை அடுத்த தலைமுறைக்காய்
நடாமோகன் மொழிப்பணியே எம்மினிய தமிழ்மகனாய்

உறவறிந்து ஊரறிந்து உலகறிந்த அருமை
சிறப்புதனை பெற்றதனால் உறவுகளுக்கு பெருமை
விருதுகளின் நாயகனே வாழ்க வாழ்கவே
உருவாக்கும் பணி நீழ்க நீழ்கவே

ஜெயம்
06-11-2024

Nada Mohan
Author: Nada Mohan