அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 221
கைக்குள் கையாய் கைத்தொலைபேசி

கைக்குள் அடங்கிவிட்ட கைத்தொலைபேசியே
இக்கட்டான நிலையிலும் கரம் கொடுப்பாய்
எம்மை உனக்குள் அடக்கி வைத்து
தன்னிலை மறந்து போக வைப்பாய்

கைக்குள் அடங்கி விட்டாலும் இருந்த இடத்தில்
உலகை சுற்றி வர உதவுகிறாயே
உன் சேவையோ மிகப் பெரியது
ஆனாலும் எம்மை சோம்பேறி ஆக்குகிறாயே

மனைவி மக்களை பிரிந்தாலும் உன்னை பிரிவேனோ
புதிய துணையாய் என்னுடன் வாழ்கிறாயே
ஒருநாள் பிரிவாயென தெரியும் எனினும்
இன்னொருவர் மகிழ்வுடன் வருவாரே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading