“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

உணர்வுகள் வழிப்பட,,,,,,,

நேவஸ் பிலிப் கவி இல (357). 21/11/24

மலர்ந்த நல்லாட்சியிலே
மக்கள் மனங்கள் மகிழட்டும்
நேசங்கள் நெஞ்சில் நிறைய
பாசங்கள் அன்பாய் பொழியட்டும்

புரிதல்கள் பூத்து விட்டால்
புன்னகை மலர் விரியும்
நெறிகள் துளிர்த்து விட்டால்
நேர்மை வழி காட்டும்

உள இறுக்கம் தளரின்
மன நெருக்கம் நிகழும்
உறவுகள் மெய்ப்பட
உரிமைகள் கை கொடுக்கும்

களவும் கயமையும் ஒழியட்டும்
லஞ்சமும் வஞ்சமும் அகலட்டும்
மனித கரங்கள் இணையட்டும்
நாட்டில் ஒற்றுமை நிலவட்டும்

மாறி விட்ட ஆட்சியிலே
மனித நேயம் மலர மாண்பு பெருக
வானும் மண்ணும் செழிக்கட்டும்
வறுமை அகல உறவுகள் சிறக்கட்டும்..
நன்றி வணக்கம்…….

Nada Mohan
Author: Nada Mohan