கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

எல்லாளன்

தமிழரின் நாடென்ற பெருமை
தாங்கிய தமிழக அரசின் பெருமை
எழில் மிகு கலாசார தொன்மை
எதையும் காப்பதில் வீறான வலிமை
மொழி வளம் பண்பாடு பக்தி
மூலத்தை பேண அதி ஆர்வம் முற்றி
அழகாக மனைதோறும் கோலம்
அதிகாலை மாலை அழகாக ஜாலம்

பதினாறு நூற்றாண்டின் முன்பு
பண்டய மன்னர் படைப்பாக நின்று
அதிசய கலைச் சிற்ப கோயில்
அறுபத்து மூன்று நாயனார் பாடல்
விதிமுறை தவறாது கட்டி
வீரிய கருங்கல்லில் வானையே முட்டி
திசையாவும் கோபுரம் சிற்பம்
திடமாக அழிவிலும் சிதறாது நிற்கும்.

மத சார்பு இல்லாத மாண்பு
மக்கள் வாழ் தரதை உயர்திட வீம்பு
பல நாடும் முதலிட நாட்டம்
பலமான தமிழகம் எழுப்பிட நோக்கம்
அயராத முதல்வரின் ஓட்டம்
ஆயிரம்யானை பலத்தினை காட்டும்
தமிழர் எம் அடையாள பூமி
தகராமல் காத்திடு தலைவனே
ஸ்ராலின்.

Nada Mohan
Author: Nada Mohan