பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு “இதயம்”. எனக்கென்றோர் இதயம்
இனிய அன்பு பதியம்
தனக்கு வரும் நலதை
தரும் எனக்கு நிதமும்.

இணையான அவட்கு
இதமான அணைப்பு
மண நாளின் முதலாய்
மனம் தருமே தொடராய்.

மனையிலுள்ள பணிகள்
மலர முகம் புரிவாள்
நினைவில் தன் கனவில்
நிறுத்தி மகன் மகளை

குடும்பம் தன் உயிராய்
குறி வாழ்வில் நெறியாய்
உருகும் அவள் இதயம்
உள்ளங்களை கவரும்.

இந்த அவள் இயல்பே
எனை கவர்ந்த நிலையே
வந்தமர்ந்த காதல்
வளர்ந்து மனை அறமாய்.

என் இதய கமலம்
இருப்பே என் பலமும்
இல்லாத பொழுதில்
இல்லமே இருளும்.
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading