15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
ஒளியிலே தெரிவது
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-42
14-11-2024
ஒளியிலே தெரிவது…
ஒளியின்றி உலகமையாது
ஓய்வின்றி உடல் இயங்காது
வளமின்றி நிலம் அமையாது
வளியின்றி உயிர் வாழாது
கனவின்றி எம் இனம் பிறக்கவில்லை
கனவு பலிக்க பட்ட பாடு மறக்கவில்லை
உறவுகளை இழந்த கதை யாரறிவார்
ஊன்று கோலும் அற்றநிலை யார் புரிவார்?
வண்ண விளக்கு வீட்டில் எரிந்தாலும்
வரும் திரியின் வேதனை யாரறிவார்
எண்ணமெல்லாம் நிழலாய் தொடருது
என் மகனில் தெரியுது உன் சிரிப்பும் கூட
கண்ட கனவு பலிக்கட்டும் அண்ணனே..
காவியமே காந்தள் மாவீரச் செல்வங்களே
ஒளியிலே தெரிவது தங்கள் முகமே
ஒரு போதும் அணையாமல் ஒளிரனுமே
நம்பிக்கை ஒளியில் நடப்போம்
நாளை நமக்கொரு தேசம் கிடைக்கும்
கனவெல்லாம் நனவாகிப் போகும்
காலம் வெகு தூரமில்லை செல்வங்களே..
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...