மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

ஔவை

காத்திருக்கும் காதலி…..
=======================

மூடுபனிக் காலமிது
முன்னிரவு நேரமிது
தேடுகிறேன் உன்னைத்
தெரியவில்லைக் கண்களுக்கு
வீடுசேர வழியுமில்லை
விடியலும் எனக்கில்லை
வாடுகின்றேன் ஏங்கியே
வந்துவிடு விரைவாக

காதலெனும் நோயால்
கனவுகளில் மிதக்கின்றேன்
மோதலின்றி இணைகிறேன்
மோகத்தில் மூழ்கிறேன்
வேதனை தாழவில்லை
வேறொரு வழியுமில்லை
சாதலைத் தவிர்த்துவிடச்
சடுதியாய் வந்துவிடு

காலங் கனியுமுன்
கைபிடிப்பேன் என்றாயே
காலங்கள் நீண்டு
காத்திருக்க வைத்தாயே
காலனவன் வருமுன்
கண்முன் வருவாயோ
காலச் சுழற்சியில்
காணாமல் போவாயோ

காதலில் காலங்கள்
கடந்தோடி விட்டது
காதல் மட்டுமின்று
கனவுடன் வாழுது
காதலைத் தந்துவிட்டு
காணாமல் போனாயே
காதலுடன் வந்து
கரையேற்றி வைப்பாயோ …

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan