15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
ஔவை
காத்திருக்கும் காதலி…..
=======================
மூடுபனிக் காலமிது
முன்னிரவு நேரமிது
தேடுகிறேன் உன்னைத்
தெரியவில்லைக் கண்களுக்கு
வீடுசேர வழியுமில்லை
விடியலும் எனக்கில்லை
வாடுகின்றேன் ஏங்கியே
வந்துவிடு விரைவாக
காதலெனும் நோயால்
கனவுகளில் மிதக்கின்றேன்
மோதலின்றி இணைகிறேன்
மோகத்தில் மூழ்கிறேன்
வேதனை தாழவில்லை
வேறொரு வழியுமில்லை
சாதலைத் தவிர்த்துவிடச்
சடுதியாய் வந்துவிடு
காலங் கனியுமுன்
கைபிடிப்பேன் என்றாயே
காலங்கள் நீண்டு
காத்திருக்க வைத்தாயே
காலனவன் வருமுன்
கண்முன் வருவாயோ
காலச் சுழற்சியில்
காணாமல் போவாயோ
காதலில் காலங்கள்
கடந்தோடி விட்டது
காதல் மட்டுமின்று
கனவுடன் வாழுது
காதலைத் தந்துவிட்டு
காணாமல் போனாயே
காதலுடன் வந்து
கரையேற்றி வைப்பாயோ …
ஒளவை.

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...