தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கமலா ஜெயபாலன்

ஆறுமோ ஆவல்
கூட்டமாய் நாமும் கூடியே வாழ்ந்ததும்
பாட்டுப் பாடியே பறந்து திரிந்ததும்
தாய்தந்தை பணத்தில் தர்மம் செய்ததும்
வாய்விட்டுச் சொல்ல வார்த்தைகள் இல்லையே
தாயின் மடியில் தலைவைத்துப் படுத்ததும்
பாயில் கூட்டாய் படுத்து உறங்கியதும்
கூட்டஞ் சோறும் குழைத்து உண்டதும்
சாட்டுச் சொல்லி சினிமாவுக்குப் போனதும்
மாறு வேடத்தில் மதிலால் பாய்ந்ததும்
தாறுமாறாகப் பரீட்சை தமிழில் எழுதியதும்
எண்ண ஆறுமோ இதயம் நோகுதே
வண்ண வாழ்க்கை வருமோ வாழ்வில்/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading