உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்

பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து குழந்தையின் முகத்தை பார்ப்பாள் பிரசவித்த வேதனையும் மறப்பாள் உதிரத்தை பாலாக்கி ஊட்டி...

Continue reading

கமலா ஜெயபாலன்

ஊக்கம்
ஊக்கம் ஆக்கம் உடையது என்று
தாக்கம் இன்றித் தந்தார் வள்ளுவனார்
நோக்ம் அதுவானால் நானிலத்தில் நன்றாய்த்
தேக்கம் இன்றிச் செல்வராய் வாழ்வோம்

கல்வியும் செல்வமும் காசும் பணமும்
சொல்லும் சுவவையும் சுந்தரத் தமிழும்
வல்லமை வாய்மை நல்லவை நான்கும்
எல்லாம் சேரும் இல்லம் தனிலே

சோம்பல் இல்லா சுதந்திர வாழ்வில்
சாம்பவி வந்து சார்வாள் மனையில்
தாம்வளர தன்னினம் தழைக்கும் எனவே
நாம் வளர்வோம் நானிலம் வளரும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan