10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கவிதை நேரம்-16.05.2024 கவி இலக்கம்-1874 வைகாசி பதினெட்டு —
Jeya Nadesan
கவிதை நேரம்-16.05.2024
கவி இலக்கம்-1874
வைகாசி பதினெட்டு
——————–
2009 வைகாசி பதினெட்டாம் நாள்
அழியாத அழிக்க முடியாத நாள்
வையகமே இருட்டடித்து இருளாகி
இதயத்தை கசக்கி பிழிந்த
இருண்ட ஓர் கொடிய நாள்
வருடங்கள் பல கடந்து சென்றாலும்
வருத்தது எம் மக்களின் பிரிவு நாள்
உறவுகளை பிரிந்து போனவர்கள் அல்ல
பிரித்து வைத்த மிக கொடியவள்
மணம் முடித்த தன் மனைவியிடம்
பிரியாமல் பிரிவோம் என மடிந்தவர்கள்
மனைவி பிள்ளைகளை அனாதையாக்கி
தத்தளிக்க வைத்த கொடூரம் நிறைந்த நாள்
சுதந்திரக் காற்றை சுகமாக சுவாசித்தவர்கள்
நச்சுக் காற்றை முகர்ந்து மடிந்தவர்கள்
விடை பெற்று சென்ற நியதியில் உள்ளாகி
விதி வரைந்த நாள் வைகாசி பதினெட்டு

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...