“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

பள்ளிப்பருவம்
————-
பள்ளிப் பருவம் எமது
கிள்ளைப் பருவம் அது
துள்ளித் திரிந்த காலை
அள்ளிப் பருகும் சோலை
பயமறியாப் பருவத்தில் நாம்
எத்தனை எத்தனை குழப்படி
கடகடவெனப் பேசி
சுடச்சுட பதில் கூறி
விடுவிடுவென நடந்தோம்
சடுகுடு விளையாடியும் மகிழ்ந்தோம்
ஒரு ரூபாவுற்கு ஐஸ் பழம் வாங்க
ஒட்டறை தட்டி பெற்ற நிலை
அதை உறிஞ்சு குடிக்கையில்
அப்படி ஒரு பேரின்பம்
குறும்புகள் செய்யயும் பருவம்
குமுகத்தில் பேச்சும் கிடைக்கும்
பொருட் படுத்தாது புகுந்து விளையாடுவோம்
கல்வி கற்று தேர்ச்சி. பெற்றோம்
கடவுளை வணங்கி ஆசி பெற்றோம்
பெற்றார் சொல் கேட்ட
பிள்ளைகள் நாம்
இன்று நினைத்தால் திரும்பி வராதா
பள்ளிப் பருவம் என்று ஏங்கியபடி!
கெங்கா ஸ்ரான்லி
நன்றியுடன்

Nada Mohan
Author: Nada Mohan