தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
“ பெற்றோரே”

நடமாடும் தெய்வங்கள் நானிலத்தில் பெற்றோரே!
உடனிருந்து உரிமைதந்து ஊசலாடும் தெய்வங்களே!
கடமையென எண்ணாது கருணையுடன் அணைப்பவரே!
மடமைதனை அகற்றி மகிமைதனைப் புகட்டுபவரே!

எங்களின் பெற்றோரே ஏணியாக நிற்பவர்
தங்களது சுமையை தூசாக நினைப்பவர்
பங்கம் நேராது பவுத்திரம் காப்பவர்
சங்கத் தமிழின் சரித்திரம் சொல்பவர்

வாழ்வில் வசந்தம் வீசிடச் செய்பவர்
ஏழ்மையை விரட்டி ஏந்திக் காப்பவர்
கண்ணில் தெரியும் கடவுளர் பெற்றோரே!
கண்குளிரக் காலமெல்லாம் காக்கவேண்டும் பெற்றோரை…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading