04
Dec
அனர்த்தம்
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
காணிநிலம் தேடித்தேடி
நாணிடும் வகையிலெம்
பேணிடும் அமைதியை
வீணடிக்கும் மாந்தர்
உதிக்கின்ற வேளையும்
உதிர்கின்ற வேளையும்
உணரமுடியா திருந்தும்
உண்மையை மறந்தனர்
இருக்கின்ற செல்வம்
இரந்துண்டு வாழ்வதை
இதயத்தில் கொண்டிவர்
இயங்கிட மறந்திட்டாரே !
போதுமெனும் மனது
போதாது என்றேயிவர்
பொதுவுடை காணிநிலமும்
பெற்றிட ஆவலிலுளைவர்
நீர்க்குமிழியெம் வாழ்க்கை
நிம்மதி ஒன்றையேதேடி
நீக்குவோம் பேராசையை
நாடுவோம் நல்வழிகளை
சக்தி சக்திதாசன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.