சக்தி சக்திதாசன்

காணிநிலம் தேடித்தேடி
நாணிடும் வகையிலெம்
பேணிடும் அமைதியை
வீணடிக்கும் மாந்தர்

உதிக்கின்ற வேளையும்
உதிர்கின்ற வேளையும்
உணரமுடியா திருந்தும்
உண்மையை மறந்தனர்

இருக்கின்ற செல்வம்
இரந்துண்டு வாழ்வதை
இதயத்தில் கொண்டிவர்
இயங்கிட மறந்திட்டாரே !

போதுமெனும் மனது
போதாது என்றேயிவர்
பொதுவுடை காணிநிலமும்
பெற்றிட ஆவலிலுளைவர்

நீர்க்குமிழியெம் வாழ்க்கை
நிம்மதி ஒன்றையேதேடி
நீக்குவோம் பேராசையை
நாடுவோம் நல்வழிகளை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading