இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சக்தி சக்திதாசன்

பரந்திருக்கும் வானத்தில்
குவிந்திருக்கும் கருமுகில்கள்
திறந்துவிடும் அணையதனை
பொழிந்துவிடும் அடைமழையாய்

நிறைந்திருக்கும் எண்ணங்கள்
நினைவுகளாய் இதயத்தில்
வடிந்துவிடும் கண்ணீராய்
சுமக்கமுடியா வேளைகளில

பிறக்கையிலே வருவதில்லை
இறக்கையிலே செல்வதில்லை
இடையில் மட்டுமேயிந்த
இடையற்ற சோதனைகள்

கைநிறைந்த செல்வங்கள்
கையோடு வருவதில்லை
நெஞ்சின் நினைவலைகள்
நெருப்பினிலே கருகிவிடும்

அழகழகாய்த் தத்துவங்கள்
அத்தனையும் வார்த்தைகளில்
அடுத்தவரின் வாழ்க்கைக்கு
அவசரமாய் அர்த்தங்கள்

சிலநேரம் அழுகை வரும்
சிந்தித்தால் சிரிப்பு வரும்
சித்தத்திலே தெரிவதெல்லாம்
செயலாக்கம் பெறுவதில்லை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading