“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு274
விருப்பத்தலைப்பு
.

இன்று யோகேஸ் அண்ணாவின் 35 வது நினைவு தினமாகும்

அவருடன் சேர்ந்து உயிர்நீத்த தலைவர் அண்ணன் அமரர் அமிர்தலிங்கம் , காயமடைந்த அண்ணன் அமரர் சிவசிதம்பரம் ஆகியோரையும், இச்சமயம் நினைவுகூர்வது
நினைவுகள் சுடுகின்றன
நெஞ்சினில் அனலாக
அன்னைத் தமிழின்
அருமை மைந்தனே !

மானிடராய்ப் பிறந்தோம்
மானிடராய் வளர்ந்தோம்
மானிடராய் வாழ்ந்தோமா ?
மனதினைக் கேட்போம்

கிடைத்த வாழ்வினைத்
தனக்காய் வாழாமல்
தனையீந்த சமூகத்திற்காய்
தனையீந்த தனயனே

அன்னையின் அக்காவின்
அருமை மைந்தனாய்
அன்புமிகு அண்ணனாய்
அண்ணன் யோகேஸ்

அகவைகள் மூபத்தோடு
ஓரைந்து ஓடிற்று
விதையாக விழுந்து
விருட்சமான அண்ணாவே !

நினைவுதினத்தில் உம்மை
நினைப்பதன்றி வேறென்ன
செய்திடமுடியும் மண்ணில்
செய்கிறேன் ஆத்மாஞ்சலி

அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன் ( தாஸ் )

Nada Mohan
Author: Nada Mohan