புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம் !
வியாழன் கவிதை நேரம்
கவித் தலைப்பு
காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய்
*******************
எதிரொலிக்கக் கண்டான் மார்க்கோனி
புதிய படைப்பினில் புத்தியைத் தீட்டினான்
அதிசயமாக உருவானது அவனிக்கு ஆனந்தமே//

தனிமையைப் போக்கிடும் சாதனம்
இனிமையை நிறைத்திடும் ஊடகம்
விந்தைகள் நிறைந்த விஞ்ஞான வளர்ச்சியில்
எந்த மூலையிலும் எதிரொலிக்கும் வகை
பந்தலாய் விரிந்தது பாமுகமாயய்ப் பரந்தது//
அருமருந்து சொல்லும் ஆரோக்கியமும் தருமே
உருவாக்கச் சொல்லும் உயர்வடையச் செய்யும்
ஆன்மீகம் வளர்க்க அனுதினமும் ஆர்வலர்கள்
தேன்தமிழ் சுவைசொட்டச் தேடுதலை நாடுவரே
சிறியவர் முதல் பெரியவர் வரை
அறிவிலே உயரவும் ஆற்றலை வளர்த்திடவும்
ஊற்றாகி நிற்கும் உன்னத ஊடகம்
போற்றிட வேண்டுமே பொழுதெல்லாம் நன்மையே//
மழலைகள் ஆரவாரம் மனத்தினை நிறைத்திடும்
பழங்களின் சவையன்ன பைந்தமிழ் மணம்வீச
கவிதைகள் படைத்திடும் கவிஞர்கள் ஆகக்
குவிந்திடுமே ஆக்கங்கள் குவலயம் வியக்கவே
எழுத்திலே முதலாய் ஏற்றத்தில் உச்சமாக
விழுதுகள் விட்டே வியாபித்த வானொலியாய்
காற்றிலே அலையாகிக் கலந்தாயே என்றும்
தோற்பதே இல்லை தொன்மைத் தமிழ் வாழுமே!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading