புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
விருப்புத் தலைப்பு
மண்ணுமே தழைக்க மகளிரைப்
*************************************போற்று
*********
மன்றுயிர்த் தோற்றம் மங்கையர் கையில்
மானிடா அறிந்திடு நீயும்
மாதவம் செய்த மங்கையைப் போற்று
மறுத்திட முடியுமா உன்னால்
இன்னலும்தாங்கி இசைபட வாழ்வாள்
இகமதில் இவளது கருணை
இணையிலா தென்று இயம்புவாய் நீயும்
இறைவனின் படைப்பிலே அருமை
தன்னுயிர் நோக்காள் தயவுடன் இருப்பாள்
தரணியில் இவளது சேவை
தன்னிகர் இல்லாத் தருமமாய் அமைந்து
தாயுமாய் இருந்துமே காப்பாள்
கன்னலாய் இனிக்கக் கனிவுடன் நடந்து
கடமைகள் செய்துமே முடிப்பாள்
காவிய மாவாள் காப்பரண் ஆவாள்
கண்ணெணப் போற்றுவாய் பெண்ணை!

மகளிரே உலகில் மாபெரும் பிறவி
மனிதருள் அரியதோர் படைப்பு
மடமையாய் எண்ணி மழுங்கிடச் செய்து
மகிமையைக் குறைக்கவும் வேண்டாம்
அகத்தினில் இருத்தி ஆலயம் அமைத்தே
அணங்கிளை வணங்கவும் செய்வாய்
ஆருயிர் மேலே அன்பினைச் செலுத்து
அண்டமும் வியந்திடும் அன்றோ
செகத்தினில் என்றும் செவ்வனே வாழ்ந்து
செதுக்குவர் புதியதோர் சமூகம்
செல்வமாய்க் குடும்பம் செழிப்புடன் ஓங்க
சேவையைத் தொடர்ந்துமே செய்யும்
மகத்துவ மான மங்கையர் தானே
மண்ணிலே தெய்வமாய் ஆவார்
மண்ணுமே தழைக்க மகளிரைப் போற்று
மனத்தினில் இருத்தியே கொள்வாய்!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு வாழ்த்துகள் . திரு.திருமதி. நடா மோகன் அவர்கட்கு நன்றி. அனைத்துக் கவிப்படைப்பாளர்களையும் பாராட்டி அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading