புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிட்டுக்குருவியே!

சிட்டுக்குருவியே!

சின்ன அலகுப் குருவிநீயே
சிந்தை மகிழ வைக்கின்றாய்
பென்னம் பெரிய செயலாலே
பெருமை கூட்டிச் செல்கின்றாய்
இன்பம் தந்த உன்வாழ்க்கை
இதய வானில் சிறக்கிறதே
மென்மை பட்டு இறக்கையாலே
மேன்மை தொட்டுச் செல்கிறாய்

கதிரின் வீச்சு உனையழிக்க
காத்தி ருக்கும் காலமிதோ!
பதியை விட்டுப் பறந்திடவே
பாதை அமைத்து செல்கின்றாய்
வதியும் வாழ்வு வண்ணமாக
வளர்ந்து நீயும் செல்கையில்
கதியும் உனக்கு நேருகிறது
காலம் உன்னை அணைக்கிறது

பட்டு வண்ணச் சிறகாலே
பாதை அமைத்த வாழ்ந்திடுக!
எட்டும் வண்ண பறப்பாலே
என்னைக் கவரும் நல்சிட்டே
கட்டும் உந்தன் கூட்டினிலே
கனிவாய் முட்டை இட்டுநீயும்
துட்டு இல்லா வாழ்கின்றாய்
துணிவாய்ப் பறந்து திரிகிறாய்
நகுலா சிவநாதன் 1754

Nada Mohan
Author: Nada Mohan

வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

Continue reading