மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

ச.ச.சந்திப்பு 222 “பெற்றோரே”
பெற்றவர்கள் முகம் நிதமும்வரும்
பற்றோடு அவர் வளர்த்த பாசம் நினைவில்வரும்
ஆண்டுத் திவசத்தை
அய்யரை அழைத்து
ஆண்டாண்டு நடாத்தினேன்
அவர்கள் தந்த சீதன வீட்டில்
ஆண்டு பல முன் போராலே
அகன்றோம் அதை விட்டு
போரின் செல் அடியில்
பேரிடியில் சிக்கிய பெருவீடு
பாழடைந்து மேடாய் ஊரில்
பார்க்க சகிக்கவில்லை
ஜயாவும் அம்மாவும்
ஆசையுடன் கட்டிய வீடு
ஒய்யார புகையிலை செடி
ஒவ்வொரு ஆண்டும் பயிர் செய்து
சேமித்த காசில் கட்டிய வீடு
ஜயாவின் படம் ஒன்றும் இல்லை
ஆனலும் முகம் மனதில் அகலாமல்
கையால் தலை கோதி
கன்னத்தில் தரும் முத்தம்
எண்ண இன்றும் கவலை
அம்மா போய் ஆண்டு பதினெட்டு
அவர் அடியில் சென்று சேர
ஆசை .
எப்போ வரும் அழைப்போ?
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading