சிவரஞ்சினி கலைச்செல்வன்

மலைப்பூ
பல்கலைக்கழகம் தெரிவாகி
பல மைல் கடந்து பயணித்து
கொல்லும் றாக்கிங் பயத்தோடு
கூட மாமா துணையோடு
சென்ற காலம் நினைவினிலே
சந்தம் சிந்தும் தலைப்பாலே!
அந்த நாட்கள் மிக இனிமை
அழகு கண்டி அதிசயமே
பேராதனையில் மலர் பூங்கா
பெரிதாய் மலைப்பை தந்ததுவே
ஆகா அதனின் எழில் எண்ண
அதனது அமைப்பை மனது எண்ண
பேனா கவிதை தான் எழுதும்
பிறக்கும் மலைப்பால்
மனம் வியக்கும்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading