சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 252
“காதலர்”
காதல் செய்வது கடும் குற்றம்
என்ற கருத்து நிலவியது ஒருகாலம்
தோதாய் பார்த்து தாய் தந்தை பொருத்தி
சொல்வார் கல்யாண நாள் இதென்று
ஆளார் கறுப்பா சிவப்பா அழகா
அடாத்து பண்ணும் ஆம்பிளையா
ஏதும் அறியா நிலையே தொடர்ந்தது எங்கள் யாழ்ப்பாண தமிழ் மண்ணில்்
மங்கள மேளம் முழங்க
சங்கு கழுத்து குனிய
மங்கையர் கழுத்தில் தாலி ஏறும்
மறு நாளே கணவன் முகம் முழுதாய் அறிய வரும்
காரில் பள்ளிக்கு போய்வரும் தோழி
காதல் சாரதி மேலாகி
ஓடிப்போன கதைகள் இரண்டு
உண்டான அந்த காலத்தும்
சாதி,சமயம்,அந்தஸ்து பார்த்து
சாதகம் சீதனம் பல பார்த்து
நாங்கள் நல்லாய் வாழ பெற்றோர்
நல்லன செய்தார் அலைந்துலைந்து .
கல்யாணம் முடிய காதல் தொடங்க
சந்தோஷ வாழ்வே சாவரைக்கும்
காதல் வாழ்வு பாதியில் பிரிவும்
சாதலும் காணுது உலகில் எங்கும்
காதல் வாழ்க
கல்யாணம் முடித்து
காதலராகி வாழ்வோமே.
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading