சிவருபன் சர்வேஸ்வரி

மனிதத்தின் நேயமே
<<<<<<<<>><<<<<<<<<

நேயம் கொண்ட உள்ளமதில் கள்ளமிருக்காது

நியாயம் தவறாப் பாதையிலே பயணமேவுமே

நல்லவுள்ளம் நாட்டினிலே நயந்து நிற்குமே
நாளும் துன்பம் தீரத்திடவே வழியேகுமே

பண்பு கொண்ட வழியும் பாங்கானது
பாகமில்லாத நிலையும் திறன் நேயமாகுமே

வஞ்சமில்லா வாழ்வழிக்க வரமும் வேண்டுமே

துஞ்சிநின்று துவண்டிடாத துணிவும் வேண்டுமே

கண்ணிய இலட்சியம் நிலைக்க வேண்டுமே
கனிவு கொண்ட மனிதர் சிறந்திடவே

காலம் தன்னில் மனிதமும் வாழுமே

குவலயம் மிளிர குமுதமும் வீசட்டுமே

பணிவு கொண்டு எழுந்த போது

பகையும் விலகவேண்டும் நிலையும் வேண்டுமே

வீழும் காலம் நமக்கு வேண்டாம்
விழுமியமும் காப்போம்
பாரில் என்றுமே

மனிதா மனிதத்தை நீயும தொலைத்து விடாதே

மனிதத்தின் நேயமே மனிதமும் ஆகுமே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading