புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

புலவி வருவது தமிழே..!

தமிழே தமிழின் அருட்ச் சுவையே
தாகம் தீராத மறத்தின் தமிழே
தலையும் வணங்கும் தமிழே மணக்கும்

தனித்துவச் சிறப்பு எய்வதும் தமிழே

பாரம்பரியமான பைந்தமிழ் சுடரே

பணபாடும் பாரதி கண்டதும் தமிழே
பொய்யாமொழியார் சொன்னதும் தமிழே

ஒளவை மொழியும் அழகு தமிழே

கம்பன் கொட்டியதும் கனிந்த தமிழே

கலிங்கம் கட்டி ஆண்டதும் தமிழே

முத்தமிழும் பொங்கியது புனிதத் தமிழே

மூவுலகும் போற்றும் முத்தான தமிழே

மஞ்சள் பூசியும் வரவில்லை மரபுத்தமிழ்

மாற்றான் மடியிலும் பிறக்கவில்லையே தமிழ்

மான்புடன் சிறந்தது வீரத்தின் தமிழே

சிந்தையில் ஊறியது சிங்காரத் தமிழே

சிந்தனையைத் தூண்டுவதும் செந்தமிழ் அன்றோ

பஞ்சம் இல்லையே பாரதத் தமிழிற்கு

பொங்கு தமிழே புலவிவரும் தமிழே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading