சிவரூபன் சர்வேஸ்வரி

ஈரம்
ஃஃஃஃ

ஈரமில்லாத மனமுமுண்டோ ஈகையில்லாத குணமுமுண்டோ //
வாகைசூடாத மனிதமுண்டோ வாழநினைக்காத இதயமுண்டோ//
பாதைதெரியாமல் பயணமுண்டோ பண்புதெரியாத நடையுமுண்டோ //

உண்மைதெரியாமல் நடப்பதுண்டோ உரிமைதனை மறப்பதுண்டோ //

தொன்மையை மறக்கும் நிலையுமுண்டோ //
தோல்வியைக் கண்டும் அச்சமுண்டோ கேளாய் //
உயர்வாயெழுவாய் ஊக்கம்கொண்டே பகர்வாயென்றும் பாசத்துடன் //
இயல்பாய் இசைவாய் ஈரமும் சுட்டிடவே //

செயலாய் செம்மையாய் செங்கதிராய் இலங்கிடவே //

நயமாய் நன்மையை நயந்திடவே என்றும் //
சுயமாய் தோன்றட்டும் சுதந்திரம் உனக்கும் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading