“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_177
“மாசி”
மாசி மகம்
பிறவி பெரும் கடலில் வீழ்ந்து
துன்ப கடலில் மாய்ந்து
ஆன்மா இறைவனது
அருட்கடலாகிய இன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து
திளைக்க செய்யும் நன்னாள் மாசி மகம்!

மகாசிவராத்திரி
அப்பனுக்கு ஒருநாள்
அம்மைக்கு பலநாள்!

மாசி கடும் குளிர்
குளிரை கொண்டாடும் சளி காச்சல் இருமல் ஊர்ரெல்லாம் நோய்
நொந்து போகும் மக்கள்!

குளிரை முண்டி அடிக்குது காற்று
மழை வெள்ளம்
இருளை அகற்றிட
சூரிய பகவானின் ஒளி ஏங்கி தவிக்கும் மனசு !

பசுமையை தேடுது காடு
பனி துளியில் நனையிது புதர்கள்
பனியில் விலகி நிற்கும் பறவைகள்
ஊர்விட்டு ஊர் சென்றிடும்!

குறைமாதத்தை நிறைவாக்கி
பங்குனியை
விரைவாக்கி
நேரமாற்றத்தை எதிர்பாத்து காத்திருக்கும் காலங்கள்!

நன்றி
சிவாஜினி
சிறிதரன்
01.02.25

Nada Mohan
Author: Nada Mohan