பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_180

“நம்பிக்கை”

நம்பிக்கை உன் தும்பிக்கை
விழுந்தாலும் எழுவேன்
ஏற்றம் காண்பேன்
எழுந்து நிற்பேன்
உறுதியை உனதாக்கு!

நோய் வந்தாலும்
நொந்து போகாதே
நாள்பட்ட நோயும்
நள்ளிரவில் போய்விடும்!

உடல் உழைப்பை
உனதாக்கு
உற்சாகம் உன்னருகில்
தட்டி எழுப்பு
தளர்ந்து விடாதே!

உணவை மருந்தாக்கு
உடல் பயிற்சியை
விருந்தாக்கு
ஊக்கத்தை கைவிடாதே
ஊர் குருவி போல்
சுத்தி சுழன்றிடு!

நம்பிக்கை தான் வாழ்க்கை
ஆழமான நம்பிக்கை
ஆலமர நிழல் போன்றது!

நன்றி வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
22.02.25

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading