புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 229 ]
“இயற்கை”

இயன்றளவு வளங்களை எமக்களிக்கும் இயற்கையன்னை
உலகில் வாழும் உயிர்கள்யாவும் தெய்வமாய்ப்போற்றும் உன்னை
உன்கருணை இல்லையெனின் உயிர்களடையும் வாழ்வின் எல்லை
காக்கும் கடவுளாக உலாவந்து உயிர்காப்பது உன் கடமை

மாதமும்மாரி பொழிதல் நீ அளிக்கும் அருட்கொடையம்மா
காற்றும் நீரும் இலவசமாய் வழங்கி உயிர்காத்தல் உன் குணமம்மா
நீ வழங்கும் தானங்கள் போதாமல் புதிய வளங்கள் தேடுகிறாரம்மா
நீ பேணிவந்த வாழ்க்கை வட்டம் சிதைந்து பருவ காலங்கள் பொய்ததம்மா!

இயற்கை தந்ந நீரைப்போத்தலில் அடைத்து விற்பனை நடக்குதம்மா!
ஆலைகளென்றும் ஆராய்ச்சியென்றும் காற்று அசுத்தமாகி மூச்சுத்திணறுதம்மா!
நீ கொள்ளும் சினம் நியாயம்தானம்மா! பாவிகளைத்தண்டித்தல் நீதி தானம்மா!அப்பாவிகளையும் சேர்த்தழித்தல் அநீதியன்றோ,அம்மா!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading