வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 202

“நினைவு நாள்”

பயன் கருதாதொருவர் செய்யுமுதவி என்றும் நன்றிக்குரியது
தாயகமீட்புப்பணியில் அர்ப்பணித்த மாவீரர் புகழ்போற்றுதற்குரியது
கார்த்திகை இருபத்தேழு மாவீரர் நினைவுநாள்
கொண்டாடி வழிபடும் தமிழரின் பூர்வ புண்ணிய நாள்

மாவீரர் கடமை தவறாதவர் கொண்ட லச்சியமே குறியானவர்
களத்திலிறங்கிவிட்டால் வெற்றி அல்லது வீரமரணம் இரண்டுமே ஒன்றெனக்கொண்டவர்
மண்ணில் வித்தாய் விழுந்தாலும் மீண்டும் முளைவிடுபவர்
கல்லறையில் துயின்றாலும் தமிழர் வாழ்வில் விளக்கேற்றியவர்

மாவீரர் திலகங்களே!
போராடிப் பயிற்சிபெற எந்த இராணுக் கல்லூரிக்கும் சென்றதில்லை
மன ஒருமைப்பட தவமியற்ற கானகம் ஏதும் செல்லவில்லை
பெற்றதாயினும் மேலாய் தமிழன்னையை மதித்தீர் உளமார
உங்கள் லட்சியம் தமிழீழ தாயகம்
பிறமுதுகு காட்டாத மறவர் கூட்டம் ஒன்றாய் திரளும்
மாவீரர் திருநாளில் உங்கள் கனவு நிச்சயம் நனவாகும்

மாவீரர் தாகம் தமிழீழத்தாயகம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading