தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

வாரம் 250
பாவை அண்ணா

நான் பெற்ற இன்பம்

சந்தம் என்பது உன் பெயரா
சந்தித்தது என் வரமா
பாமுகம் எனும் தளத்திலே
பலமுகம் சேர்ந்தொன்றாய் நியத்திலே

வாரமும் 250 கண்டு விட,
செவ்வாய் தோறும் பாவை அண்ணா,
பல கவிருடன். அதிபர், துணைவியர், சக உறவுகளுக்கும் கோடா கோடி நன்றிகள்.

உயிருடன் கலந்த தாய்மொழியே
பல வரலாறு கண்டவள் நீயல்லவா
கவிதைக் களத்தினில் வந்ததனால்
தமிழைப் புரட்டிப் பார்க்கின்றேன்

நான் பெற்ற இன்பம் இத்தளத்தினிலே
யாவரும் பெற்று வாழ்கவென
வாழ்த்திப் பல்லாண்டு, பல்லாண்டென
நன்றிக்கரங்கள் குவித்து நவில்கின்றேன்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan