கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

பழமை

நுழைந்தே புதுமைகள் உலகுடன் பழகின

பழைமை பண்புகள் மெல்லவே விலகின

பழையவை மறைந்தன

புதியவை தோன்றின 

கிளைவிட்ட நவீனத்தில் மகிழ்ச்சியா ஊன்றின

அந்தக்காலம்போல இனியும் திரும்ப வருமா

இந்தக்காலம் அதைப்போல் இனிமை தருமா

அன்றோ அமைதியாய் வாழ்வும் வாழப்பட்டது 

இன்றோ அவதியால் வாழ்வும் சூழப்பட்டது 

மூத்தோர்கள் தந்த பழமையெனும் பொக்கிஷம் 

காத்ததை வைப்போமே எங்கள் கைவசம் 

தொன்மைக் காலத்தில் எல்லாமும் இயற்கை 

உண்மை , இன்றைய வாழ்க்கையுங்கூட செயற்கை.

ஜெயம்

06/06/2022

Nada Mohan
Author: Nada Mohan