அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-01-2026

சுற்றியிருக்கும் இருள்
சூறையாட நினைத்தால்
துணிவெனும் தீச்சுவாலை
கொழுந்து விட்டெரியட்டும்!

விழுந்தால் எழுவாய்
விதிதனை வெல்வாய்
விடியும் என்றே
வலிதனை முகிழ்வாய்

கால்கள் சோர்ந்தால்
கனவுகளைத் துணையாக்கு
கண்ணீர் வழிந்தால்
கடமையை நினைவாக்கு

இடி விழும் வேளையிலும்
இதயத்தின் பிடி தளராதே
தன்னம்பிக்கை ஒளி கண்டு
தளர்ந்திடுமே துயர் நிழல்

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading