“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

திசைகாட்டி

ஜெயம் தங்கராஜா

கவி 743

திசைகாட்டி

கல்வியுடன் உலக அறிவுதனை ஊட்டி
நல்வழிகள் காட்டி நிற்கும் திசைகாட்டி
திறமையுற மாணவர்கள் எளிமையாக போதித்து
சிறந்தவரை உருவாக்கி காட்டிடுவார் சாதித்து

கருவறையில் தாயாலே உயிரைப் பெறுகின்றோம்
வகுப்பறையில் குருவாலே வாழ்வைப் பெறுகின்றோம்
வருங்கால சமுதாயத்தை ஏற்றவாறு உருமாற்றி
தருகின்ற ஆசிரியர் பணியும் போற்றி
களிமண் கலவையும் சிலையாகும் தன்மை
வெளிப்பட்டோர் பலரிங்கு இவராலே உண்மை
அறியாமையெனும் இருளை அகற்றிய புனிதர்கள்
அறிவுள்ளவர் எவராலும் போற்றப்படும் மனிதர்கள்

நல்லொழுக்கம் பெரும்பாலும் ஆசிரியரிடம் கற்றது
கல்வியெனும் கொடையதுவும் ஆசானிடம் பெற்றது
அறிவுப்பசியை தீர்த்திடும் அளப்பரிய சேவை
குறிப்பாக ஆசிரியர் வழிகாட்டல் தேவை

ஜெயம் 03-10-2024

Nada Mohan
Author: Nada Mohan