தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

தியாகராஜா யோகேஸ்வரன்.

வாழ்வே பேறாகும்..!
– தியாகராஜா யோகேஸ்வரன்.
(கவிதை – 2)

தனி தனியாக பிறந்தோம். மழலை மொழி பேசினோம். தாயின் இசை தாலாட்டில் தூங்கினோம். தந்தை மடியில் தவழ்ந்து விளையாடினோம். எடுப்பார் கை பிள்ளையாக குதூகலித்தோம். கிறுக்கி வரைந்து வித்தியா விருத்தி கண்டோம். எண்ணி எண்ணி பார்த்து விரல்கள் பத்தானதே. அரிச்சுவடி அச்சரங்கள் கைவண்ணமானதே. ஓடிவிளையாடி பாப்பாக்களாய் குதூகலித்தோமே.அறிவு முன்னேற்றப் பாதையில் காலடிகள் நடைபோட்டதே. அன்பு பாசம் உறவு பரிணாமம் பெற்றோம். வாழ்விலே சேவை செய்திட உறுதி பூண்டோம். பள்ளிகள் சென்று புள்ளிகள் பெற்றோம். தரம் பிரிந்து பல கலைகள் கற்றிட ஞானம் வந்தது. குறி வைத்து படித்து பல திசைகள் சென்றோம். இளமை கல்விகளின் அடிப்படை வழி சமைத்தது. அவரவர் ஆசைகள் முயற்சிகள் திருவினை தந்தது. பதும வயதும் கழியவே பொறுப்பாய் படித்து உழைக்க வழியும் வந்தது.

– நன்றியுடன்
தியாகராஜா யோகேஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan