திருமதி. அபிராமி.

09.05.2023

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -221
தலைப்பு ! ( அறுசீர்விருத்தம் )
“காணி”
வனமது தாயக காணி
வளமும் நிறைந்த பூமி //

தனமது கையிலும் இல்லை
தங்கவோர் இடமில்லா தொல்லை

இனத்தவர் சிலரும் சேர்ந்து
இரவுபகல் விட்டினர் சோர்ந்து

கனத்த உழைப்பின் பாணி
கண்ணில் பட்டது காணி

வெட்டிய காணியின் வீடு
வேதனை நிறைந்த கூடு

பட்டினி பஞ்சம் ஊடே
பணியின்றி தவித்தது நாடே

கட்டிய கனவுக் கோட்டை
கரைந்தது உயிர்பலி வேட்டை

விட்டுப் பிரிந்தோம் நாட்டை
விடிவுவரை விடைகொடுக்க
மாட்டோம் //

கவித்திறனாய்வு மிகமிக நேர்த்தி.
போற்றுதல் பாராட்டுக்கள் பாவை அண்ணா…🙏🏻மற்றும் .. கவிஞர் பாலரவி அவர்களுக்கும்🙏🏻

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading