“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏

வியாழன் கவி — 87

தலைப்பு — பேசும் மொழி

வாசல்வந்த காற்று பேசியது தென்றலாய்
வசந்தகால பூக்கள் பேசியது வாசமாய்
வஞ்சியவள் நானம் பேசியது மெளனமாய்
வண்ண பூக்கள் பேசியது பட்டாம்பூச்சியிடம்.

இருகண்கள் பேசியது காதல் மொழியில்
இதயம் பேசியது அமைதி மொழியில்
இனங்கள் பேசியது பல மொழியில்
இயலாமை பேசியது சைகை மொழியில்.

பல நூறு மொழி இருந்தும்
பல வழி மொழி இருந்தும்
பலர் பேசும் மொழி புரியவில்லை- ஆனால்
இதயம் பேசும்மொழி புரிந்தது இறைவனுக்கே.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
05/05/2022

Nada Mohan
Author: Nada Mohan