புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

நகுலா சிவநாதன்

அச்சாணி நீயல்லவோ!

இல்லத்தின் விளக்காகி
எழுகின்ற நட்சத்திரம்
உள்ளத்தின் மகிழ்விற்காய்
உளமாரக் காத்திருப்பு

உலவுகின்ற பேரொளியே
உணர்வான பெண்மையே!
ஞானத்தின் அறிவுதனை
நாளுமாய் பெற்ற சோதியே!

பிரபஞ்ச தூணாக பைந்தமிழின் பேரோளியே!
செந்தமிழின் நறுந்தேனே!
தெவிட்டாத உன் கடமை
தேர் போன்ற வாழ்விலே
தேனான பெருவிருட்சம்

அச்சாணி நீயாக ஆளும் உலகின்
அரவணைப்புப் பெட்டகமே!
உச்சம் தொட உயர்வாய் என்றும்
ஊக்கம் படைத்து எழுவாய் நாளை!

நகுலா சிவநாதன் 1752

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading