20
Mar
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
20
Mar
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின்...
நகுலா சிவநாதன்
பெண்மை எனும் மென்மை
அன்பை விதைக்கும் ஆணிவேரே
அகிலம் காக்கும் பெண்ணினமே
உன்னை வருத்தி உயிர்கொடுக்கும்
உத்தம இனம் பெண்ணினமே
அன்னை என்ற ஆளுமைக்குள்
அத்தனையும் அடங்கும் உத்தமிகளே
தொன்மைத் தமிழால் வாழ்த்துகிறேன்
தொண்டு செய்யும் மங்கையர!
ஆற்றல் கொண்டே எழுபவளே
ஆலம் விழுதாய் இணைப்பவளே!
ஊற்றாய் வளர்க்கும் உன்திறமை
உணர்வாய்; மகவை உயரவைக்கும்
காற்றில் சுழலும் பம்பரமாய்
காலை மாலை கடமையாற்ற
போற்றும் உநதன்; நற்செயல்கள்
பொழுதாய் நிறைக்கும் இல்லத்திலே
மென்மை என்ற பெண்மைக்குள்
மேனி புதைக்கும் பெண்டீரே
துன்பம் என்ற சகதிக்குள்
துணிந்தும் விழாமல் எழுந்திடுக
இன்பம் என்னும் புன்னகையால்
இடர்கள் களைந்து மிளிர்ந்துநின்று
அன்பு கொண்டு அணைத்திடுவீர்
அகிலம் நிறைக்க உலகாள்வீர்
நகுலா சிவநாதன்1712

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...