அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

நகுலா சிவநாதன்

பொங்கும் உளமே
தங்கும் தையே!!

பொங்கும் உளமே
தங்கும் தையே!!
எங்கும் எழிலாய்
பூக்கும் மனமே!!

மங்கா வரமே
மானிட உரமே
மழையாய் வருவாய்
மண்ணை நிறைப்பாய்

பையவருவாய் பலனைத் தருவாய்
வையம் செழிக்க
வருவாய் தையே!!

கரும்பு செழிக்க
கதிரவன் ஒளிர
ஆவினம் பெருக
ஆனந்தம் பொங்க
கொண்டாடுவோம்
நற்பொங்கல்

உளமே பொங்க
வளமே பெருக
களமே கதிராய்
காணும் தையே!!

நகுலா சிவநாதன்1745

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading