புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

நாதன் கந்தையா

நீர்க்குமிழி.

கீழ்வானம் அழகொளிர்ந்து
சிரிக்க கண்டேன்….
கோரை பூநுனியில் தும்பி வந்து
அமரக்கண்டேன்….
மீன்கொத்தி கீழ்நோக்கி
பறக்கக்கண்டேன்….
மின்மினிகள் குருவி கூட்டுள்
ஒளிரக் கண்டேன்….
கொடுங்கோலாய் போரொன்றும்
நிமிரக்கண்டேன்…..
கனமழையில் ஆடொன்று நனையுதென்று
கண்ணீர் விட்டழுத
நரியை கண்டேன்…..
பாதை மாறி கரைமீண்ட கலிங்க நாட்டான்
கடைவிரித்து படை நகர்த்தும்
இலங்கை கண்டேன்….
சோவியத்து ரசியாவில் நோட்டோ செய்யும்
நெறியற்ற பொறிப்பந்தல்
அதுவும் கண்டேன்….
நேற்றுப்போல் நாளைக்கும்
இருக்கும் என்றால்
நீயும் ஒரு பைத்தியம்தான்
என்றேசொல்வேன்….
காற்றொருநாள் அரைநாழி
விடுப்பெடுத்தால்
கந்தலாய் போகும் கதை
நீர்க்குமிழிபோல….
காற்றொருநாள் அரைநாழி
விடுப்பெடுத்தால்
கந்தலாகி போகும் கதை
நீர்க்குமிழிபோல…..

-நாதன் கந்தையா-

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading