மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-50
20-02-2025

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
நிம்மதி எங்கே காண்பீரோ?
இறைவனைத் தான் துதிப்பீரோ
இரக்க குணம் நிலைத்திடுமோ!

கனவு உலகில் மிதந்து
கண்டதெல்லாம் கொண்டிடக்
கற்பனை நிறைந்திடும் உனக்கு
கண்ணெதிரே குலைந்திடும் வாழ்வு

நல்ல அனுபவம் கொண்டது பரவசம்
நலமற்றது கண்டதிங்கே பக்குவம்
ஆசையை அகற்றி இங்கே
ஆற்றலால் வென்று வா

நினைப்பதெல்லாம் நடக்குமென்று
நிம்மதி வேண்டாமிங்கு
எதிர்கொண்டு எண்ணம் போல் வாழ
ஏமாற்றம் காணோமிங்கு.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan