வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(82) 23/11/22
தலை நிமிர வாழ்ந்தோர்க்காய்
நம் தலை சாய்ப்போம்.

புழுதியும் குருதியும் தழுவிய தேசம்
ஈழத் தாய் மண்ணின் சோகம்
மாற்றம் கேட்டு நிற்கும் மறத் தமிழர்

புரட்சியின் வித்துக்களாய்
அழுத்தத்தின் உதறல்களாய்
அடிமை மண்ணை மீட்டெடுக்க
குல மாதர் மானம் காக்க

அடிமைப் பூட்டுடைக்க
விடுதலை வேட்கை கொண்டு
அக்கினிப் பறவைகளாய்
கடமையில் உயர்ந்த கர்ம வீரர்கள்

அன்பாகி அன்பில் நிலையாகி
இருள் போக்கும் பணியில் நெருப்பாகி
மண் காக்க மனிதம் நிமிர
தம்முயிரீந்த மண்ணின் மைந்தர்கள்

தியாக தீபங்களை எம் நெஞ்சிலே தாங்கி
கார்த்திகை மலர்களை கரங்களில் ஏந்தி
மனிதம் நிமிர தம் தலை சாய்த்த
மா வீரர்களுக்காய் எம் தலை சாய்ப்போம்
அஞ்சலிப்போம் வீர வணக்கங்களுடன்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading