பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

நோயற்ற வாழ்வே..

சிவதர்சனி இரா

வியாழன் கவி 2100!

நோயற்ற வாழ்வே..!!
கோடி கோடியாய்
உழைத்தே குவித்தாலும்- உடல்
வாடி வதங்கும் நோய்
பிடி விட்டு விலகுமோ- நாடி
நாளம் அடங்கிப் போகும்
நல்ல தேக ஆரோக்கியமின்றி..

வித விதமாய்ப் பரவும்
விசித்திர உலகு வலை விரிக்க
வகை தொகையாய் மாட்டி
வல்ல உயிர் வதை படுமே
மருந்தும் மாத்திரையும்
கூடிவரும் உறவினராய்
கூடு விட்டே உயிர் போகும்
அதுவரை இதன் ஆட்டமேயாம்..

ஆதிகால மனிதன்
அலைந்துலைந்து வாழ்ந்தான்
அவனே அறியா நோயெலாம்
ஆட்டிப் படைக்குது இங்கே
நாளொரு புதுமை விரிகிறது
மீளா உலகுக்கு உயிரோ
நோயென வீழ்ந்து பறக்கிறது..
சிவதர்சனி இராகவன்
30/1/2025

Nada Mohan
Author: Nada Mohan