உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்

பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து குழந்தையின் முகத்தை பார்ப்பாள் பிரசவித்த வேதனையும் மறப்பாள் உதிரத்தை பாலாக்கி ஊட்டி...

Continue reading

பசுமை

சுமித்ரா தேவி

கவிதை இல 18
தலைப்பு . பசுமை
மேகத்தாள் துகில் விலக
கதிரவன் கண் மயங்க
மின்னலில்
வானம் சிலிர்க்க
முழங்கிய
இடியினில்
பார்மகள் விழிக்க
பூமழை
தொடுத்தாள்
கார்மகள்
களித்தாடி மகிழ்ந்து
கண் திறந்தன
பசுமை
சுமித்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan