“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

புது வருடம்

ராணி சம்பந்தர்

புது வருடம் பூத்தது சித்திரை 14
மெதுவாக வருடிய ஒளிக்கற்றை
முத்திரை பதித்தது சந்தோஷக்
கூத்தில் குதித்ததே திருநாளென

மருத்து நீரில் தலை முழுகிடவே
பெருத்த பெரும் பாவம் கழுவிட
வருத்தும் சோக நோயில் அழுதிட
மானிடர் தேகமோ தொழுதிடவே

பூமி சூரியன் சுற்றிய களைப்பிலே
சாமி போலக் கூட வரும் பரிவாரக்
கிரகங்கள் குளிர்ச்சி அடைந்திட
மோசம் செய்யும் தோஷம் நீங்கிட

திரண்டு வரும் உற்றார் ஒன்றிட
கூடித் தூபமிடும் பொன்னாளில்
பெறும் கைவியளமும் உள்ளம் மலரத்
தரணி எங்கும் கொண்டாடும் இப்
புது வருடமே இப் புது வருடம் .

Nada Mohan
Author: Nada Mohan