போர்க் கோலம்

ராணி சம்பந்தர்

காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்

மெல்ல மெல்லக் கூட்டுச் சேரும்
பக்கவாத்திய நாடுகளாலும்
உருக்குலையும் அரபு நாட்டில்
கருகிச் சாம்பலாகுதே பிஞ்சுப்
பாலகர்கள்

அணுகுண்டுப் போர்வையில்
ஒளிந்துள்ள மர்ம இரகசியம்
ஆயுத வாள் முனையில் தேன்
பூசிய விற்பனை ஆயதங்கள்

எதனால் இந்த அகோர வாழ்வு
ஏனிந்த உதிரம் கொட்ட வேள்வி
நாளும் பொழுதும் காணுமிந்த
சீர் கேடான நார் கிழிந்த போர்க்
கோலம்

ஆளுமந்த அரசுத் தலைவர்கள்
மூளுமிந்தத் தீப்பிழம்புப் பாளுங் கிணற்றில் வீழாது
சிந்தித்து செயலாற்றுவாரா
போர்க் கோலம் தொடராது .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

Continue reading