வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

மனமென்னும் மேடையிலே

நேவிஸ் பிலிப் கவி இல ( 139) 27/06/24

மரக் கிளையில் வந்தமரும் பறவையென
சிறகடித்துப் பறக்கும் எண்ணப் பறவை
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
வானில் வெட்டி மறைகின்ற
மின்னல் சிதறல்களாய்

வேடிக்கைப் பேச்சுக்கள்
வாடிக்கையாகிட
கோடி இன்பம் கண்டு
வரவின்றி செலவு செய்து

உழைப்பில்லா ஊதியம்
உல்லாச வாழ்க்கை
ஏக்கங்கள் கொண்டதில்லை
தாக்கங்கள் கண்டதில்லை

தினம் தினம் ருசித்த வாழ்க்கை
ஆயிரம் மாற்றங்களால்
தொலைத்தலும் தேடலுமாய்
கழிந்திடும் பொழுதுகள்

வாழ்க்கைப் படகினிலே
காலம் நகர்ந்திட
நினைவுகள் மட்டும்
மனதோடு பேசுது.

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading