மனோகரி ஜெகதீஸ்வரன்

வேள்வி

விரும்பியதை அர்ப்பணித்தலே வேள்வி

ஆளாளுக்கிங்கே சொன்னார் சேதி
அதையிதை அடியிட்டுக்
காட்டி

தோளுயர்த்தி நானும் சொல்கின்றேன்
வாளுயர்தாதே விரும்பிக் கேளும்

அக்கினி வேள்வியே
சிவ வேள்வி
அதனை ஆற்றுவர்
அவிப்பொருள் தூவி
மந்திரங்களைச் சிதைக்காது
சித்தத்தால் கூவி

எழும்பும் புகைக்குப்
பலியாகும் கிருமிகள்
அழும் மனமும்
குணமாகி
சுனையாகும்

அண்டிய பகுதிகளும்
நஞ்சை விலக்கும்
புண்ணியச் செயல்கள்
புலத்தில் நிறையும்
எண்ணிய எண்ணங்கள்
இயல்பாய் நடக்கும்

அறிவியலும் நிறுவுகின்றது
வேள்விப் பயனை

கேலிக்குரியதாய் ஆக்காதீர்
வேள்விக் குழியை
காவித் திரியாதீர்
கயவராய்
உயிர்ப்பலியை

நாசுவைக்க விரும்பின்
நறுக்கித் தின்னும் உம்சதையை
கூசும் செயலைச்
நெய்வதற்குச் செய்வதற்கு
கூட்டி வராதீர் கொள்கைகளை

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading