மனோகரி ஜெகதீஸ்வரன்

பாமுகமே வாழீ

பாமுகமே வாழீ
பாரூறும் பாமுகமே வாழீ
படைப்பகம் கொண்டவளே வாழீ

நேர்முகம் கொண்டவளே நீவாழீ
நெஞ்சகத்தில் நிலைத்தவளே நீவாழீ
பாரகம் காட்டுபவளே நீவாழீ
நேரத்தில் ஊர்பவளே நீவாழீ

நிகழ்ச்சிகள் பலதை எய்து
செய்தாய் எம்மைக் கைது

உந்தன் பாமுகம் கண்டு
உள்ளக் குரலொலி திண்டு

போகுதேயெம் பொழுதுகள் இனிதாய்
விழிக்குதே புலன்கள் எளிதாய்
செழிக்குதே அறிவும் பெரிதாய்
உயிர்க்குதே ஆக்கத்திறனும் உடனாய்

வளர்ந்து பரவி வாழுதே
எம்தமிழும் உந்தன் பாமுகத்தால்
நிகழ்வில் காளமாடுவோரின் உமிழ் திறத்தால்

தளிர்களும் வளரத் தருகின்றாய் தளம்
தன்னம்பிக்கை உயர
இடுகின்றாய் உரம்

இளசுகளும் பழசுகளும் இயங்குவதற்கு இடுகின்றாய் தளம்

ஏந்தி நிற்கின்றோம்
நாமும் நன்றிக்கலம்

நிகழ்வுகள் ஆக்கும் உந்திறன்
புகழைப் பூசியே செல்லும்
வாழ்த்துத் தகவலையே
சொல்லும்

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading