“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

மொழி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-43
05-12-2024

மொழி

உலக மொழிகளுள் மூத்தவளே
முச்சங்கம் வளர்த்தவள் நீயல்லவா
தேனினும் இனிய செம்மொழியே
தெவிட்டாமல் நாவுரைக்கும் எம் மொழியே!

வண்ணப் பாட்டு எடுத்து
வாஞ்சையோடு கதை தொடுத்து
அருமையான கவி கிறுக்கி
அகம் குளிர நிற்கின்றேன்!

கண்ணினென் தமிழ்மொழியே
கண்ணாய் உனைப் போற்றி
திசை எட்டும் பரவி வர
திகட்டாமல் இயம்பி நிற்ப்பேன்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan