10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ரஜனி அன்ரன்
“ வலிசுமந்த நாள் “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 18.05.2023
பெருவலி சுமந்து பேரிடர் நடந்து
மாறாத வடுவாகி மனதில் ரணமாகி
மேகக் கூட்டம் கரும்புகையாகி
மேதினியே உறைந்து நின்ற
மே பதினெட்டாம் நாள்
ஆண்டுகள் பதினான்கு ஆனபோதும்
ஆறவில்லை இன்னும் காயங்கள் !
முள்ளி வாய்க்காலில் மூச்சடங்கியவர்க்கு
முத்தான சொந்தங்களை தொலைத்தவர்க்கு
உறுப்புக்களை உடமைகளை இழந்தவர்க்கு
உறுதுணையாக வேண்டும் நீதி
உரிமைகளுக்கு வேண்டும் தீர்வு
தொடர்கிறது நீதிக்கான போராட்டமும்
கிட்டவில்லை இன்னும் தீர்வுகளும் !
சிறைக் கைதிகளை மீட்டிட
மனக் காயங்களை ஆற்றிட
காணாமற் போனோரை மீட்டிட
ஒட்டுமொத்த உறவுகளும் ஒன்றுகூடி
ஒற்றுமையோடு குரல் கொடுத்து
நீதிக்காய் போராடி வீதியில் நிற்போர்க்கு
மடிந்த உறவுகளுக்கு வலிசுமந்த நாளில்
விடிவொன்று கிடைத்திட வழிசெய்வோம் !

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...